Tuesday 3 August 2010

உறங்கும் அழகு


பஞ்சணையில் முகம் புதைத்து 
படுத்திருக்கும் உன்னை 
பார்த்தவாறே அமர்ந்திருக்கிறேன் 
எதிரே நான்...

உன்னை கடிக்க வந்த கொசுவை
வேகமாய் விரட்டிவிட,
பட்டென அது பறந்து சென்று
பிறிதொரு நாழிகையில்
என் கையில் அமர்கிறது...
அதன் வயிற்றுப் பசிக்கு நானும்
என் காதல் பசிக்கு 
நீயும் உணவாக 
மெல்ல நகர்கிறது நிமிடங்கள்...

பாதம் வரை உன் புடவையை 
இழுத்து விடும் சாக்கில்
அங்கே ஓர் முத்தம் பதிக்கிறேன் நான்
ஒரு செல்ல சிணுங்கல் உன்னிடம் வெளிப்பட
மெட்டி ஒலி மயக்கத்தில் இருந்து விடுபட்டு
என் இடம் சென்று அமர்கிறேன்

ஆயிரம் கவிதைகள் ஓர் உருவாய்
நூறு மயில்கள் ஓர் எழிலாய்
உறங்கும் உன்னை விடுத்து
அந்த ஒற்றை நிலவை
எழுதத் துணிந்த என்னை கண்டு 
சிரிக்கிறது விதி,
எழுத தொடுத்த வரிகளை மறந்து 
உன்னழகை பருகிக்கொண்டு 
அமர்திருக்கிறேன் நான்,
வெட்கி மறைகிறது
மேகத்தினூடே நிலா!