Tuesday 31 July 2012

மனைவி இழந்தவன்

 
 
உன் இதழ்களும் என் கன்னங்களும் உரசிய
அந்த சிணுங்கல் பொழுதுகள்
என் நெஞ்சின் மேல் நீ உறங்கிய
அந்த இனிய இரவுகள்
ஊடல்கள் கொண்டு நாம் பிரிந்த
அந்த சில நிமிடங்கள்
கலவி கொண்டு இறை உணர்ந்த
அந்த காதல் பொழுதுகள்
மனதின் எங்கோ ஓர் மூலையில்
மங்கலாய் நினைவுக்கு வந்து போகிறது
உன் ஒவ்வொரு நினைவு நாளிலும்...

காத்திருப்பு



உன்னை முத்தமிடும் நாட்களுக்காக
காத்திருக்கிறேன் நான்
முத்தமிடா ஒவ்வொரு நாளும்...

Friday 27 July 2012

நிலவும் நானும்...


சூழ்ந்திருந்த வான்மேகங்கள் இல்லை,
சிதறிக்கிடந்த விண்மீன்கள் இல்லை,
ஒளிவீசிக் கொண்டிருந்த நீயுமில்லை...
காணாமல் போனதன் காரணமேன்?
என்னவளின் அழகை கண்டுவிட்டாயோ?
இல்லை, அவள்புகழ் நான் பாடியதை கேட்டாயோ?
ஆனாலும் உனக்கு இவ்வளவு பொறாமை கூடாதடி,
எத்தனை நாள் தான்
உன்னையே வர்ணிப்பேன் நான்...