Friday 4 March 2011

தேவதைகளின் தேவதை


எங்கும் ஒரே அமைதியாய்,
உலகமே ஊமையாய் நிற்கிறது,
நறுகமழ் தென்றல் வீசியும்
மரங்களின் சலசலப்பு ஏனோ இல்லை,
எந்திரமாய் பூமி சுற்றியும்
மந்திரமாய் சூரியனின் வெப்பமேதும் இல்லை,
உயிருள்ள கடைசி ஜீவனும்
உள்ளே உறைந்து போய் வியந்து நிற்கிறது!
"இப்படி ஒரு அழகா என்று?"
இதையொன்றும் அறிந்திராமல்
பூமி நோகுமோ
இல்லை பாதம் நோகுமொவென
பொத்தி பொத்தி நடக்கிறாய் நீ,
தேவதைகளின் தேவதையை சொந்தமாக்கிய கர்வத்தில்
நிலம் அதிர நடக்கிறேன் நான்...