Showing posts with label கவிதையான காதல் கதை. Show all posts
Showing posts with label கவிதையான காதல் கதை. Show all posts

Thursday, 20 May 2010

கவிதையான காதல் கதை - எப்படி ஆரம்பித்தது?

பள்ளி காலம் முடிந்து
பருவ காலமாய் ஆரம்பித்தது
அந்த கல்லூரி வாழ்க்கை
முதல் நாளே பார்த்த உன்னை
மனதில் பதிக்க வெகு நாளாகவில்லை
ஒரே வகுப்பிலிருந்தும்
ஒரு வருடம் பேசிக் கொள்ளவேயில்லை...
பின்பு ஒரு நாள்
என்னைப் பார்த்து மெல்லிதாய் சிரித்தாய்
அன்றே புது ஜென்மம் எடுத்தேன்,
கல்லூரி முடிந்த மாலை வேளைகளில் இறந்து
மறுநாள் காலை வேளைகளில் பிறந்தேன்...

ஒரு நாள் எதற்காகவோ பேசிக் கொண்டோம்
பின்னர் பழக அரமபித்தோம்...
அது என்ன மாயமோ தெரியவில்லை,
ஊரெல்லாம் வாய் பேசும் நான்
உன்னிடும் மட்டும் வார்த்தை வராமல் தவித்தேன்
புரிந்து கொண்டேன் இது காதல் என்று
நட்பை கொச்சை படுத்தாமல்
நடந்து கொள்ள போராடினேன்
ஒன்றாய் சிரித்தோம்,
ஒன்றாய் அழுதோம்
காலங்கள் சென்றன
நம் காதலும் வலு பெற்றது
ஆனால் சொல்லத்தான் இயலவில்லை
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...

Tuesday, 11 May 2010

கவிதையான காதல் கதை - காதல் கோழை


எத்தனை முறை உன்னையே
சுற்றி சுற்றி வந்திருப்பேன்
அட, நம் ரசனை ஒன்றாய் இருக்கிறதென
உன்னிடம் எத்தனை முறை வியந்திருப்பேன்
சில சமயம் உண்மையாக
பல சமயங்களில் பொய்யாக...

நாம் தனியே நேரம் செலவிட
எவ்வளவு முயன்றிருப்பேன்...
நீ எனக்கு முக்கியமானவள் என
எத்தனை தடவை புரிய வைத்திருப்பேன்...
எல்லாம் தெரிந்தே என்னுடன் பழகி
அறிந்தும் அறியாததும் போல
நடந்து கொண்டாய்...
இதற்கே தரலாமடி
உனக்கொரு செவாலியே விருது...

சொல்லத் துணிவிருந்தால் தான்
எப்பவோ சொல்லி இருப்பேனே
இப்படி என் மனதிடம்
ஒவ்வொரு நாளும்
வசை வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனே.
கொஞ்சம் உன் நிலை இறங்கி வந்து
உன்னை காதலிக்கிறேன் என்று
இந்த காதல் கோழையிடம்
சொல்லி விட்டுத் தான் போயேன்
புண்ணியமாய் போகும் உனக்கு...