Saturday 20 May 2017

நான் வரும் வரை

உன்னோடிருந்த தருணங்களில் உணரா காதல்
உன்னை பிரியும் பொழுதுகளில் உணர்கிறேனடி
இன்று அப்படியொரு பொழுதே...

வானூர்தியில் பகட்டாய் மேலே செல்ல
மனம் மட்டும் உனைநோக்கி தவழ்கிறது
மாயம் செய்தனையோ?
மலர் அம்புகள் எய்தனையோ?
மனதின் புலம்பல்கள் ஆயிரமடி...

நிலவும் நானுமாய் தனிமையானவனை
'சூரிய'னாய் வந்து
'நீரவு'ம் நானுமாய் மாற்றியவள் நீ
என்னை மீண்டும் கவிஞனாக்கியவள் நீ
என் கவிதையும் நீயடி

நான்காண்டு மணவாழ்க்கையில் உணரா இன்பம்
மீண்டும் உன்னை காண்கையில் கொள்வேனடி
காத்திரு அன்பே நான் வரும்வரை,

கனவில் அணைப்பேன் அதுவரை...

No comments:

Post a Comment