Sunday 28 February 2010

விண்ணை தாண்டி வருவாயா - என் பார்வையில்


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "Young Superstar"ஆக புது அவதாரம் எடுத்திருக்கும் சிம்பு இளமை ததும்ப அழகாக வாழ்ந்திருக்கும் ஒரு காதல் கதை இது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் "சிம்புவா இது?" என ஆச்சர்யபட்டு, பின்னர் அவருடைய mannerism'களில் மயங்கி, அவருடைய காதல் வலி நிறைந்த வாழ்க்கையில் ஒன்றிப் போய் படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். சிம்புவை எதற்கு தேர்ந்தெடுத்தார் கௌதம் என குழம்பிய சில ரசிகர்களில் நானும் ஒருவன். அனால் இப்படி ஒரு காதல் கதைக்கு இவரை விட அருமையான choice வேறு யாரும் இருக்க முடியாது.

கதை இவ்வளவு தான் - மேல் வீட்டில் ஜெஸ்ஸியின் மலையாள christian குடும்பம். கீழே வாடகை வீட்டில் கார்த்திக்கின் தமிழ் Hindu குடும்பம். பார்த்த உடனே ஜெஸ்ஸியை காதலிக்கிறார் கார்த்திக். மதம், வயது என காரணம் காட்டி காதலை மறுக்கிறார் ஜெஸ்ஸி. கார்த்திக் அவளை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாம் கனவுகளில் காண்பது போலவே. அப்பொழுதே நம் மனதுடன் சப்பென ஒட்டிக் கொள்கிறார் கார்த்திக். ஒரு நிலையில் தனக்கும் கார்த்திக்கை பிடிக்கும், ஆனால் பல பிரச்சனைகள் வரும் அதனால் நமக்குள் காதல் வேண்டாம் என கூறி விடுகிறார் ஜெஸ்ஸி. நண்பர்களாக பழகலாம் என கார்த்திக் வெள்ளை கோடி காட்டி கேட்க, ஜெஸ்ஸி அதற்கு OK சொல்கிறார். ஆனால் நண்பராக பழக முடியாமல் இருவரும் காதலில் விழுகின்றனர். பின்னர் விஷயம் வீட்டுக்கு தெரிகிறது. அண்ணன் முதலில் சண்டை போடுகிறார். பின்னர் தந்தை வீட்டை காலி செய்ய சொல்கிறார். கல்யாணம் செய்ய கேரளாவில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்கிறார் ஜெஸ்ஸி. ஆனால் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். இதற்குள்ளாக Assistant Director வாய்ப்பு பெறுகிறார் கார்த்திக். சில பல குழப்பும் மிகுந்த காட்சிகளுக்கு பிறகு ஜெஸ்ஸிக்கு திருமணமாகி UK சென்று விட்டதை அறிகிறார் ஹீரோ. மனதை தேற்றி கொண்டு Director ஆகும் முயற்சியில் வெற்றி பெற்று ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படம் முடிந்து release ஆவதற்குள் நடப்பது தான் suspense நிறைந்த climax.

எனக்கு இதில் பல குழப்பங்கள் - அது எப்படி காதலை சொன்ன ஒருத்தரிடம் நண்பராக பழக முடியும் என நம்புகிறார் ஜெஸ்ஸி? இப்படி நடக்கும்னு ஒரு doubt இருக்கும் இல்ல. அப்புறம் எதுக்கு தான் allow பண்றீங்க friend'ஆ இருக்கலாம்னு? நீயும் வேணாம் உன் friendship'உம் வேணாம்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே. செரி விடுங்க படம் மூணு மணி நேரம் போகணும், A.R.Rehman இன்னும் ஒரு ரெண்டு பாட்டு போடணும் இல்ல. அதுக்காக மன்னிச்சு விட்ரலாம். சிம்பு சும்மா பிண்ணி எடுத்திருக்கார். கலக்கல் dance. கலக்கல் mannerism. கலக்கலான dialogue delivery. எல்லாம் கௌதம் மேனனோட கை வரிசை.  cotton saree'யில் படம் முழுக்க மிக அழகாக வந்திருக்கிறார் த்ரிஷா . அவர் நடிப்பும் மிகவும் பொருத்தம். ஆனா அவரை விட assistant director'a வர்ற பொண்ணு செம fugure'னு சொல்லாம இருக்க முடியல.

இந்த படத்தை ஒரு நிஜ அழவாக எடுத்துக் கொண்டால் எனக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என சொல்வேன். குழப்பம் நிறைந்த ஜெஸ்ஸி, அப்படி ஒரு குழப்பவாதியை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பாவமான ஜீவன். Goa'வில் இருக்கும் நாயகனை சென்னைக்கு கட்டாயம் வருமாறு அழைக்கும் நாயகி, நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என கூறுகிறார். "நீ சென்னைக்கு போகனுமானு ஒரு நொடி யோசிச்ச இல்ல" அதனாலையே எனக்கு இந்த காதல் வேண்டாம்னு சொல்ற ஜெஸ்ஸியை நல்லா பளார் பளார்னு நாலு கொடுக்கலாம் போல இருந்தது. இதென்ன காதலா இல்ல test பண்ணி வெளையாடற game'ஆ? படத்தோட அவ்ளோ ஒன்றி போயிட்டேன். அட ஏன்டா இப்படி காதல் காதல்னு சாவரீங்கன்னு கேக்கலாம் போல கூட தோனுச்சு. May be நானும் காதலிக்க ஆரம்பிச்சா இப்படி தோணாதுன்னு நெனைக்கறேன். wait பண்ணி பாப்போம். நம்மள தூக்கி போட்ற மாதிரி ஒரு காதல்வருமான்னு?

சிம்பு கூட வரும் cameraman character அருமை. comedy'க்கு நல்லாவே கை கொடுத்திருக்கிறார். காதலுக்கும் தான். கேரளாவின் இயற்கை காட்சிகளையும், நம்ம ஊர் சென்னையின் ECR, சோழிங்கநல்லூரின் beach resort, என பல  தெரிந்த இடங்களை பார்க்கும் பொழுது மனதிருக்கு இதமாகத் தான் இருக்கிறது. அமெரிக்காவின் அழகை கொஞ்சம் வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார் இம்முறை. மிக சிறந்த crew. எடிட்டர் Antony'ஐ பற்றி சொல்லவே தேவை இல்லை. அருமையான வேலைகாரர். இசை புயலின் துள்ளல் படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் release'ஆன அப்போ ஒரு பாடல் மட்டும் தான் முதலில் பிடித்திருந்தது. But few days back, I started liking all the songs. Particularly "ஆரோமலே" song'ஓட high pitch super. சும்மாவா ரெண்டு Golden Globe கொடுத்தாங்க. இரண்டு காட்சிகளில் திடீரென எதோ ஒரு ஆங்கில பாடல் (rock song மாதிரி) பின்னணி இசையாக வந்தது மனதில் பதியவில்லை. Re-recording as usual அட்டகாசம். படத்தின் climax twist'லாம் ஓகே தான். ஆனா அதுல ஒரு சின்ன matter இடிக்குதே. ரீல் படத்தோட Hero, heroine மற்றும் crew'வோட பஸ்'ல போற scene'அ தான் சொல்றேன். படம் பாத்தவங்களுக்கு கிளைமாக்ஸ் புரிஞ்சு அதுக்கு அப்புறம் இந்த small logic problem யோசிக்க சில மணி நேரமாச்சும் ஆகும். என்ன மாதிரி கொஞ்சம் கவனிச்சும் கவனிக்காம பாத்தீங்கன்னா ஒடனே புரியும்.

எனக்கு தெரிஞ்சு theatre'ல subtitle'ஓட பாத்த முதல் படம் இது தான். நம்ம மக்களுக்கு மலையாளம் புரியாதா, இல்ல இவர் படத்துல வர்ற English dialogues யாருக்கும் புரியாதா? எதுக்கு subtitles? இன்னொரு விஷயம். படத்துல கெளதம் தன்ன தானே நக்கல் அடிச்சிருக்கார். அந்த scene கூட நல்லா இருக்கு. அட ஏன் தான் படத்துல ஒரு dialogue திரும்ப திரும்ப வருதுன்னு தெரியல. "நான் ஏன் உன்னை காதலிச்சேன்"? இந்த கேள்விய கேட்டு கேட்டு கொய்யால என்னை tension பண்ணிட்டாங்க. மொத்ததுல ஜெச்சியோட வார்த்தைகள்ல சொல்லனும்னா "It's a feel good film". என் style'ல சொன்னா, படம் பாருங்க. ஆனா அதே மாதிரி லவ் பண்ணாதீங்க. மவனே பேஜார் ஆகிடுவீங்க :D

Wednesday 24 February 2010

சீறும் சிங்கம் சச்சின்

சச்சினின் இப்படி ஒரு ஆட்டத்திற்காக மொத்த நாடே காத்து கிடந்தது. அந்த இனிய நிகழ்வு இன்று குவாலியரில் அரங்கேறியது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக ஒருவர் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். அந்த சாதனையை படைத்தது ஒரு இந்தியர் என நினைக்கும் பொழுது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.

இன்னும் போட்டி முழுதாக முடியவில்லை. இருப்பினும் என்னால் சச்சினை பற்றி உடனே எழுதாமல் இருக்க முடியவில்லை. நாளை பல பத்திரிகைகளும், என்னை போன்ற வலை மனை எழுத்தாளர்களும் சச்சினை மெச்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால முதல் மரியாதை எனதாக இருக்க இந்த ரசிகனுக்கு ஒரு சின்ன ஆசை. போட்டி முடிவை பற்றியெல்லாம் எவனுக்கு அக்கறை. தென் ஆப்பரிக்கா நானூற்றி சொச்சம் ரன்களையே துரத்திச் சென்று உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தவர்கள். போட்டியின் முடிவு எப்படி இருப்பினும் சச்சினின் சாதனை ஒரு வரலாற்றுச் சிறப்பு.

சென்னையில் 1997'இல் சயீத் அன்வர் 194 ரன்கள் குவித்த பொழுது ஏற்பட்ட அவமானக் கரையை இன்று துடைத்தெரிந்திருக்கிறார். என்னவொரு மகத்தான நாள். முன்னே ஓர் நாள் சச்சின் 186  ரன்கள் குவித்த தினம் இவர் அன்வரின் சாதனையை முறியடிக்க மாட்டாரா என ஒவ்வொரு ரன்னுக்கும் கணக்கு பண்ணி கொண்டிருந்தேன் நான். இத்தனைக்கும் எனக்கு கிரிக்கெட்டின் மேல் அவளவாக ஈடுபாடு இல்லை. யாரவது ஸ்கோர் சொன்னால் காதில் போட்டுக் கொண்டு போய் விடுவேன். ஆனால் 1997'ஆம் ஆண்டு அன்வரின் 194, இந்தியாவின் பந்து வீச்சையும், முக்கியமாக பீல்டிங்கை குறை சொல்லும் காலமாக மாற்றியது. எத்தனை கேட்ச்சுகள் கோட்டை விட்டிருப்போம் அன்று. எத்தனை ரன் அவுட்டுகள் விட்டிருப்போம்.

இன்று அன்வரின் சாதனையையும், சச்சினின் சாதனையையும் தராசில் நிறுத்திப் பார்க்கிறேன். எவ்வளவோ மாறுதல்கள் வந்துவிட்டன ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் இன்று. அன்வரின் பக்கம் இது சாதகமாக இருந்தாலும் இருப்பினும் சச்சினின் விளையாட்டில் ஒரு பிழை கூட இல்லை. அன்று அன்வர் பல பிழையுடன் விளையாடினார். நம்மவர்களின் பீல்டிங் சரியில்லாத காரணத்தால் அவ்ளோ பெரிய ஸ்கோர் எடுக்கும் நிலை ஆயிற்று. இவ்வளவு வயதிலும் அத்தனை சிரத்தையுடன் தனக்கே உரிய பாணியில் சச்சின் அடித்த இரட்டைச் சதம், தன் தரத்தால் தராசில் எடை கூடி கீழே சென்று விட்டது. 1997'இல் அன்வர் செய்த சாதனையை சமீபத்தில் ஒரு ஜிம்பாப்வேகாரர் சமன் செய்துள்ளார். ஆனாலும் அந்த மாட்ச்சில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. அதனால் அவர் சாதனையை இங்கே நான் கருத்தில் கொள்ளவில்லை.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கு சிறந்த உதாரணம் நம் சச்சின். கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்களில் ஒருத்தராக மட்டுமே இருந்த சச்சின், இன்று இந்த சாதனையால் தனித்து நிற்கிறார். மனதி ஒரே ஒரு சின்ன வருத்தம். அன்வர் சாதனை படைத்த அதே சென்னையில் சச்சினும் சாதனை படித்திருந்தால் மனதுக்கு ஒரு இதமாக இருந்திருக்கும்.

சச்சின் விளையாடவே தேவை இல்லை. சும்மா வந்து நின்றாலே போதும், அரங்கம் அதிரும். வேற ஒரு வீரர் செரியாக விளையாட வில்லை என்றால் அவரை வசை பாடும் நம் நாவு சச்சினை பற்றி மட்டும் பேச எழாது. அவ்வளவு செல்லம் அவருக்கு. வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என இன்று நிரூபித்திருக்கிறார். சிங்கம் இன்னும் உறுமிக்கொண்டு தான் இருக்கும். மேலும் பல சாதனைகளை நாம் காணத்தானே போகிறோம். வாழ்க இந்தியாவின் செல்லப் பிள்ளை சச்சின்...

Tuesday 9 February 2010

யார் அவள்?


மழைபெய்து ஓய்ந்திருந்த
மயக்கும் மாலை வேளையில்
மழையில் முழுதாய் நனைந்துவிட்ட
மங்கை ஒருத்தியை என்
மனை வாசலில் கண்டேன்..
மதிய உறக்கம் கலைந்து
அப்பொழுது தான் விழித்திருந்த நான்
வெளியே ஓடிச் சென்று
அவளை உள்ளே வருமாறு விளிக்க
'பிறிதொரு நாள் வருகிறேன்' என
விரைந்து சென்றுவிட்டாள்.
ஒன்றும் புரியாமல்
உள்ளே சென்றுவிட்டேன் நான்...

பல வருடங்கள் கடந்து
அதே போல் மழை பெய்து
ஓய்ந்திருந்த ஒய்யார மாலைநேரம்
இன்னும் மதிய உறக்கத்திலிருந்து
எழுந்திராத என்னை
இருகரங்கள் இறுகப்பற்றி அழைத்தன.
அதே நங்கை அங்கே,
உற்சாகத்துடன் எழுந்து
அவளுடன் செல்லத் துணிந்த
சில நாழிகள் கழிந்து
திரும்பி பார்க்கிறேன்
என் கட்டிலை...
சுற்றி குடும்பத்தார் கதறிக் கொண்டிருக்க
இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் நான்,
தலைமாட்டில் ஒரு அகல்விளக்குடன்...

Thursday 4 February 2010

சொல்லாத காதல்


 உனக்காக பல செய்த நான்
எனக்காக வேணும்
என் காதலை சொல்லியிருக்க வேண்டும்...
உனக்காக சில செய்த நீ
எனக்காகவே
உன் காதலை நீயாவது சொல்லியிருக்கலாம்...

சொல்லிக்கொள்ளாத நம் காதல்
காலத்தால் கரைந்து விட,
இன்று கல்லறையில் சந்திக்கின்றோம்
நாலு சமாதி தாண்டி...
என் மனைவியும்
உன் கணவனும்
நம் காலடிகளில் அழுவதை
காண சகியாமல்
இங்கே பல உயிர்கள்
புதைந்து இருக்கின்றன...

இன்று உணர்கிறேன்
சொல்லாத காதலால்
காதலர்கள் மட்டுமல்ல
இன்னும் பிற உயிர்களும் அல்லவா
பாதிக்கப்பட்டு விட்டன..

Monday 1 February 2010

காதல் என்றால் - Goa

 Goa திரைப்படத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு வலி நிறைந்த பாடல் இதோ...



பாடல் வரிகள்:

இதுவரை இல்லாத உணர்விது,
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே....

காதலி என்றால் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு,
பெண்கள் என்றால்
ஆணை கொள்ளும்
நோய் ஆனதே...

ஐயோ, இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுபுள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியமாக்கும்
பெண்ணைத் தேடி தொலையாதே...

என் உறக்கம் கலைத்தவள்



சிறு வயதில் உண்டான காதல் இது,
இதயத்தில் எழவில்லை என்றாலும்
உள்ளேபுக வெகுநாட்கள் ஆகவில்லை...
காதலில் ஆரம்பித்து
கல்யாணத்துடன் தொடர்கிறது என் கதை...

அன்று காதல் நினைவுகளால்
என் உறக்கம் கலைத்தவள்,
இன்று மனைவியான பின்னும்
மறக்காமல் கலைக்கிறாள்
என் உறக்கத்தை
தன் குறட்டை ஒலியால்...

பல மாதங்களாய்
புதுமனைவியின் இந்த இன்னலை
பொறுத்து வரும் நான்
இன்று புயலாணேன்...
என் பக்கத்தே புரண்டு படுத்தவளை
இழுத்தணைத்து
இதழ்களை இருட்டில் தேடி
அழுத்தமாய் முத்தமொன்றை பதித்தேன்!
செல்ல சிணுங்கலுடன்
கண்ணிமைகள் படபடத்து
மீண்டும் உறங்கத் தொடங்கியவளிடம்
குறட்டைச் சத்தம் குறைந்திருந்தது...

மிகப் பெரிய மருத்துவச் சாதனை
செய்துவிட்ட மகிழ்ச்சியில்
உறங்கச் சென்றேன் நான்
பலத்த குறட்டையுடன்,
மனைவியும் மருந்து கண்டுபிடிக்கட்டுமே என்று ;)