
சிறு வயதில் உண்டான காதல் இது,
இதயத்தில் எழவில்லை என்றாலும்
உள்ளேபுக வெகுநாட்கள் ஆகவில்லை...
காதலில் ஆரம்பித்து
கல்யாணத்துடன் தொடர்கிறது என் கதை...
அன்று காதல் நினைவுகளால்
என் உறக்கம் கலைத்தவள்,
இன்று மனைவியான பின்னும்
மறக்காமல் கலைக்கிறாள்
என் உறக்கத்தை
தன் குறட்டை ஒலியால்...
பல மாதங்களாய்
புதுமனைவியின் இந்த இன்னலை
பொறுத்து வரும் நான்
இன்று புயலாணேன்...
என் பக்கத்தே புரண்டு படுத்தவளை
இழுத்தணைத்து
இதழ்களை இருட்டில் தேடி
அழுத்தமாய் முத்தமொன்றை பதித்தேன்!
செல்ல சிணுங்கலுடன்
கண்ணிமைகள் படபடத்து
மீண்டும் உறங்கத் தொடங்கியவளிடம்
குறட்டைச் சத்தம் குறைந்திருந்தது...
மிகப் பெரிய மருத்துவச் சாதனை
செய்துவிட்ட மகிழ்ச்சியில்
உறங்கச் சென்றேன் நான்
பலத்த குறட்டையுடன்,
மனைவியும் மருந்து கண்டுபிடிக்கட்டுமே என்று ;)
No comments:
Post a Comment