Thursday 4 February 2010

சொல்லாத காதல்


 உனக்காக பல செய்த நான்
எனக்காக வேணும்
என் காதலை சொல்லியிருக்க வேண்டும்...
உனக்காக சில செய்த நீ
எனக்காகவே
உன் காதலை நீயாவது சொல்லியிருக்கலாம்...

சொல்லிக்கொள்ளாத நம் காதல்
காலத்தால் கரைந்து விட,
இன்று கல்லறையில் சந்திக்கின்றோம்
நாலு சமாதி தாண்டி...
என் மனைவியும்
உன் கணவனும்
நம் காலடிகளில் அழுவதை
காண சகியாமல்
இங்கே பல உயிர்கள்
புதைந்து இருக்கின்றன...

இன்று உணர்கிறேன்
சொல்லாத காதலால்
காதலர்கள் மட்டுமல்ல
இன்னும் பிற உயிர்களும் அல்லவா
பாதிக்கப்பட்டு விட்டன..

No comments:

Post a Comment