Thursday 20 May 2010

கவிதையான காதல் கதை - எப்படி ஆரம்பித்தது?

பள்ளி காலம் முடிந்து
பருவ காலமாய் ஆரம்பித்தது
அந்த கல்லூரி வாழ்க்கை
முதல் நாளே பார்த்த உன்னை
மனதில் பதிக்க வெகு நாளாகவில்லை
ஒரே வகுப்பிலிருந்தும்
ஒரு வருடம் பேசிக் கொள்ளவேயில்லை...
பின்பு ஒரு நாள்
என்னைப் பார்த்து மெல்லிதாய் சிரித்தாய்
அன்றே புது ஜென்மம் எடுத்தேன்,
கல்லூரி முடிந்த மாலை வேளைகளில் இறந்து
மறுநாள் காலை வேளைகளில் பிறந்தேன்...

ஒரு நாள் எதற்காகவோ பேசிக் கொண்டோம்
பின்னர் பழக அரமபித்தோம்...
அது என்ன மாயமோ தெரியவில்லை,
ஊரெல்லாம் வாய் பேசும் நான்
உன்னிடும் மட்டும் வார்த்தை வராமல் தவித்தேன்
புரிந்து கொண்டேன் இது காதல் என்று
நட்பை கொச்சை படுத்தாமல்
நடந்து கொள்ள போராடினேன்
ஒன்றாய் சிரித்தோம்,
ஒன்றாய் அழுதோம்
காலங்கள் சென்றன
நம் காதலும் வலு பெற்றது
ஆனால் சொல்லத்தான் இயலவில்லை
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...

Tuesday 11 May 2010

கவிதையான காதல் கதை - காதல் கோழை


எத்தனை முறை உன்னையே
சுற்றி சுற்றி வந்திருப்பேன்
அட, நம் ரசனை ஒன்றாய் இருக்கிறதென
உன்னிடம் எத்தனை முறை வியந்திருப்பேன்
சில சமயம் உண்மையாக
பல சமயங்களில் பொய்யாக...

நாம் தனியே நேரம் செலவிட
எவ்வளவு முயன்றிருப்பேன்...
நீ எனக்கு முக்கியமானவள் என
எத்தனை தடவை புரிய வைத்திருப்பேன்...
எல்லாம் தெரிந்தே என்னுடன் பழகி
அறிந்தும் அறியாததும் போல
நடந்து கொண்டாய்...
இதற்கே தரலாமடி
உனக்கொரு செவாலியே விருது...

சொல்லத் துணிவிருந்தால் தான்
எப்பவோ சொல்லி இருப்பேனே
இப்படி என் மனதிடம்
ஒவ்வொரு நாளும்
வசை வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனே.
கொஞ்சம் உன் நிலை இறங்கி வந்து
உன்னை காதலிக்கிறேன் என்று
இந்த காதல் கோழையிடம்
சொல்லி விட்டுத் தான் போயேன்
புண்ணியமாய் போகும் உனக்கு...

Tuesday 4 May 2010

சுறா - என் பார்வையில்


என் room mate ஏதோ ஓசியில கூட்டிட்டு போறாரேன்னு நம்பி போனேன். மீதி freinds'லாம் "அட மக்கா, அந்த படமா...வேணாம்டா"னு படிச்சு படிச்சு சொன்னனுவளே. நான் எங்க கேட்டேன். 'ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டர மாதிரின்னு' சொல்லிட்டு போயிட்டேன். அங்க போய் பாத்தா தான் தெரியுது பய புள்ள எல்லாரையும் வளச்சி வளச்சி குத்திருக்காய்ங்கன்னு. "ஐயோ ராமா, இந்த மாதிரி கழிசடை பசங்க கூடலாம் என்னை ஏன் கூட்டு சேர வைக்கற"ன்னு பொலம்பிட்டே வெளிய வந்தேன். மத்த post'ல சொன்ன மாதிரி இதுல கதைன்னு சொல்ல ஒன்னுமே இல்லையே. இருந்தாலும் try பண்றேன்.

'யாழ் நகர்' குப்பத்துக்கே செல்லப் பிள்ளை நம்ம 'சுறா'. தன்னுடைய கள்ளக்கடத்தல் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும்னு கள்ள வோட்டுல மந்திரியானவர் தான் வில்லன். இவங்க life cross ஆகும் போது என்ன நடுக்குதுங்க்றது தான் matter. குப்பத்த காலி பண்ணிட்டு அங்க theme park கட்ட plan போடறாரு minister. ஆனா minister பணத்துலையே அங்க தன் குப்பத்து ஜனங்களுக்கு வீடு கட்டி தராரு சுறா. இதெல்லாம் ஏற்கனவே எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு இல்ல. அட விடுங்கப்பா இந்த கான்செப்ட் தானே பார்த்திபன்ல இருந்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி வரைக்கும் நடிச்சு பெரிய ஆள் ஆகி இருக்காங்க. அதுக்காக விஜயும் அதே ஸ்டைல follow பண்ணனுமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழுது.ஹ்ம்ம்...என்ன பண்றது எல்லாம் நேர கொடுமை..

தல தான் அசல்னு ஒரு குப்பை படத்த கொடுதிட்டார்னு feel பண்ணிக்கிட்டு இருக்கற நேரத்துல இங்க அத விட ஒரு கொடுமை. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்'ங்கற மாதிரி ஆகிபோச்சு நெலமை. என்ன தமிழ் மக்களை பாத்தா இளிச்சவாய் பசங்களா தெரியுதா? நீங்க குப்பை படமா release பண்ணிட்டே இருப்பீங்க நாங்க அத காசு கொடுத்து தியேட்டர்ல போய் பாக்கணுமா? இப்படிலாம் படம் எடுத்தா ஏன் எல்லாரும் திருட்டு வீசீடீல படம் பாக்கமாட்டான். நான் தெரியாம தான் கேக்குறேன் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மனசாட்சியே இல்லையப்பா. குர்காவூன்ல இது நாள் வரைக்கும் அமைதியா படம் பாத்தேன். இன்னைக்கு என்னடான்னா அவ்ளோ சேட்டை, கும்மாளம், கூச்சல்....இதுல என் room mate'க்கு சந்தோசம் வேற. "பாத்தியா, எங்களுக்கு எவ்ளோ support'னு? ஸ்ஸ்சப்ப்ப்பா....இப்பவே கண்ணா கட்டுதேனு ஆகி போச்சு போன பத்து நிமிஷத்துல.

விஜய்க்குனு சில கேள்விகள் வெச்சிருக்கேன்...
  • உங்களுக்கு 50'வது படம் எடுக்க வேற கதையே கெடைக்கலியா?
  • உங்க ரசிகர்கள் மட்டும் பாக்கவா படம் நடிக்கறீங்க? (பாவம் producer'னு கூட சொல்ல முடியாது. ஒரு வேளை Income tax கணக்கு காட்ட தான் இந்த மாதிரி படம் எடுக்கறாங்களோ?!)
  • பெரிய ஹிட் எதுவுமே கொடுக்காத ஒரு director கிட்ட எப்படி படம் பண்ணலாம்னு முடிவு பண்ணீங்க? (நீங்க சொல்ற மாதிரிலாம் சீன்ஸ் அண்ட் சாங்க்ஸ் வைப்பாருன்னா)
  • ஆமா, வர வர எல்லா படத்துலயும் இந்த பல்ல கடிச்சிட்டே பேசறீங்களே..அது என்னங்கணா அது, ஸ்டைலா? (சகிக்கல)
  • அந்த கோர்ட் சீன்ல என்னமோ பண்ணீங்களே என்னது அது? ஓ, அதுக்கு பேர் தான் modulation'அ...அட கடவுளே, அட கடவுளே...
  • அப்பரம் அந்த பொம்மாயி பாட்டுல தமண்ணாவோட pant'அ புடிச்சிட்டு என்ன ஆட்டுணீங்களே, அதுக்கு பேர் என்னங்கணா? என்னது dance movement'அ...கொய்யால, வாய்ல எதாவது அசிங்கமா வந்துட போகுது...
குடும்பம் கொழந்தை குட்டியோட படம் பக்கா வராங்கலேன்னு ஒரு சின்ன அக்கறை இருந்த இப்படி பண்ணி இருப்பியா..ராஸ்கல். சின்ன புள்ள தனமா இருக்கு...அவங்க டௌசர இவரு கழட்டி கழட்டி மாட்டுவாராம். இதுக்கு பேரு dance'ஆம். "போக்கிரி"யில அசின் டிக்கியில கை வெச்சப்பவே நாலு பேர் குரல் கொடுத்திருந்தா இன்னைக்கு இந்த நெலமைக்கு போய் இருக்காது.

மணி ஷர்மா மீசிக்ல ரெண்டு பாட்டு மட்டும் கொஞ்சம் beats'ஓட இருக்கு. ஒரு பாட்டு "கும்பிட போனா தெய்வம்" ஸ்டைல்'ல பிளஸ் 4 பொண்ணுங்க ௨ piece'ல. Director Sir இப்படி ஒரு கோவில் திருவிழா நான் எங்கயுமே கேள்வி பட்டதில்லே. Hero Intro தான் கொடுமைனா, அவர் அந்த நெருப்பல இருந்து எந்தரிச்சு வர்றது அத விட கொடுமை. Hero'வ அடிச்சு போட்டது எங்கயோ, ஆனா திடீர்னு சிலைக்கு அடியில இருந்து எந்திரிப்பாராம். அது சரி, இப்படிலாம் logic பாத்தா கதையே இருக்காதே.

தமன்னாக்காக படம் பாக்கலாம்னு கூட சொல்ல முடியல. ஏன்னா வேட்டைக்காரன் அனுஷ்காவ விட இவங்களுக்கு ரொம்ப கம்மியான சீன் தான். படத்தோட டிக்கெட் காச விட popcorn பிளஸ் pepsi செலவு தான் ஜாஸ்தி. ஓசியில டிக்கெட் போட்டா சாப்ட நீ தான் தம்பி வாங்கனும்னு சொல்லாம சொல்லிட்டாரு என் room mate. ஹ்ம்ம்...அது ஒரு தனி கொடுமை. மொத்ததுல படம் முடிஞ்ச ஒடனே நான் பண்ண prayer "கடவுளே, இப்படி ஒரு பாவத்த இன்னைக்கு பண்ணினதுக்காக என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடு...plsss..." :(