Thursday 10 July 2014

மழையும் மழைசார்ந்ததும்

சில்லென்ற மழைத்துளிகள் முகத்தில்விழ
சுறுசுறுவென கண்ணாடியை ஏற்றிவிட்டு
சிரித்துக் கொள்கிறேன் காருக்குள் நான்...
மழையும் குளிரும்
நாம் கூடிக்களித்த தருணங்களை
நினைவில் நிறுத்தி சென்று விட்டிருந்தன...
மெல்ல அசைபோட்டுக்கொண்டே
வீடு வந்து சேர்கிறேன் நான்...
வாசற்கதவில்பட்டு உன்னைத் தீண்டிய மழையை
செல்லமாய் கோபித்துக்கொண்டு
எனக்காய் காத்திருக்கிறாய் நீ,
உன் வெட்கப்புன்னகை உணர்த்துகிறது
உன் நினைவுகளிளும் அதேதருணங்கள் என்று...