Tuesday 31 July 2012

மனைவி இழந்தவன்

 
 
உன் இதழ்களும் என் கன்னங்களும் உரசிய
அந்த சிணுங்கல் பொழுதுகள்
என் நெஞ்சின் மேல் நீ உறங்கிய
அந்த இனிய இரவுகள்
ஊடல்கள் கொண்டு நாம் பிரிந்த
அந்த சில நிமிடங்கள்
கலவி கொண்டு இறை உணர்ந்த
அந்த காதல் பொழுதுகள்
மனதின் எங்கோ ஓர் மூலையில்
மங்கலாய் நினைவுக்கு வந்து போகிறது
உன் ஒவ்வொரு நினைவு நாளிலும்...

No comments:

Post a Comment