Tuesday 20 April 2010

உனக்கு ஒரு தண்டனை


கருகரு குழலால் என்னை
கவிழ்த்துவிட முயன்றாய்...
நான் கவிழ்ந்தது
உன் குறுகுறு கண்களிலலடி...

துருதுரு பேச்சினில் என்னை
துவட்டி எடுத்தாய்...
நான் துவண்டது
உன் சிற்றிதழ் புன்னகையில்...

பளபளக்கும் பட்டினில் என்னை
பஸ்பமாக்கிவிட துணிந்தாய்...
நான் இடிந்ததோ
உன் கோபத்தின் சிதறலில்...

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
நீ சிதைத்து விட்ட
எந்தன் இதயச்சிறையில்
என்றும் நீ இருக்க கடவாயாக...

No comments:

Post a Comment