Friday 23 April 2010

இதுவும் காதலே...



கல்லறையில் நீ,
சிறையறையில் நான்...
தடவியல் நிபுணர்கள் சாட்சி தேடினர்
உயிரற்ற என் உடற்கூட்டை தூக்கிலிட...
எப்படியும் இவர்கள் அறியப்போவதில்லை
அந்த பாழடைந்த மாளிகையும்
அதில் அமைந்த நம் சொர்கத்தையும்...

விடுதலை பெற்று வந்தால்
என் முதல் காரியம்,
அங்கே உள்ள உன்
ரகசிய கல்லறை மேல்
என் படுக்கையறை அமைப்பேன்...
தினமும் இரவில் உன்னை அணைப்பேன்...
என்றும் நீங்காமல்
என்னுடன் இருப்பாய்
என்னைப் புரிந்து கொள்ளாத
என் காதலியே...

No comments:

Post a Comment