Tuesday 27 July 2010

ஒரு ஆண் தாயின் தாலாட்டு...


ஆராரோ ஆரீரரோ 
பூமகளே கண்ணுறங்கு,
வானத்து விண்விளக்கே
விழிமூடி நீயுறங்கு...

சூரியனார் வம்சமடி
சிணுங்காம கண்ணுறங்கு,
சோழர்குல மாணிக்கமே
சீக்கிரமா நீயுறங்கு...

நிலாவத் தான் புடிச்சிவர
உங்க அப்பாரு போயிருக்கார்,
விடியும் முன்னே நீயுறங்க 
வந்திடுமே நிலவும் இங்கே...

(ஆராரோ ஆரீரரோ)

நாடாள பிறந்தவளே
நிம்மதியா கண்ணுறங்கு,
பாராளும் காலம் வரும் 
பகட்டில்லாம நீயுறங்கு...

வானவில்லின் தேர் ஏறி
வானத்தையும் வென்றிடலாம்,
இன்று மட்டும் கண்ணுறங்க
நாளை முதல் உன் ஆட்சியடி...

(ஆராரோ ஆரீரரோ)

நேத்தைக்கு தான் இம்சை பண்ண
இன்னைக்குமா அதே கதை,
முடியலடி உங்கம்மாவுக்கு 
தூங்கி போடா என் பட்டுகுட்டி...

நாள் பூரா வேலைசெஞ்சு 
ஒடுங்கி போய் வந்திருக்கேன் ,
இதுக்கு மேலையும் படுத்தாம 
தூங்கி போடி என் செல்லகண்ணு...

(ஆராரோ ஆரீரரோ)

6 comments: