Friday 24 December 2010

நானும் உன்னை...


என் இதய வாசலில்
உன் காலடித்தடம் பதிய
ஊமைத் தவம் இருந்தேன்...
உண்மை உணர்ந்து
நீ என்னுள் நுழைந்த நேரம்
என் நிலை மறந்து கிடந்தேன்...
காற்றில் பறப்பதாயும் கடலில் மிதப்பதாயும்
மகிழ்ச்சியில் திளைத்தேன்...
உன் வார்த்தைகளின் புண்ணியத்தில்
அடங்கி இருந்த என் இதயம
சட்டென விடுதலைப்பெற்று வேகமாய் துடிக்கின்றது...
ஓடும் குருதி சடுதியில் வேகம்பெற
என் உடலெங்கும் வியர்க்க
மனம் நிறையும் மகிழ்ச்சியுடன்
உலர்ந்து போன என்னுதடுகள் வழியே
உரைத்தனன் நான்
"நானும் உன்னை..."

No comments:

Post a Comment