Sunday 16 January 2011
ஆடுகளம் - என் பார்வையில்
பைவ் ஸ்டார் பில்ம்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் பொங்கல் விருந்து தான் 'ஆடுகளம்'. விருந்து என்றால் சாதாரண விருந்து அல்ல நல்லா அருசுவையான மகா விருந்து.
சேவல் சண்டையின் வரலாற்றை கேட்க கேட்க ஆச்சர்யத்துடன் படம் பார்க்க துவங்கினேன். முகத்தில் ரத்த காயத்துடனும் கையில் கத்தியுடனும் ஒரு ஒட்டு வீட்டினுள் தனுஷ், கை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தபஸ்ரீ பன்னு. இதற்க்கான flashback'ஆக ஆரம்பிக்கிறது மொத்த படமும். மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் பெரிய சேவல் சண்டைக்காரர் பேட்டைக்காரன். அவரின் இரண்டு கைகள் தாம் துரை (கிஷோர்) மற்றும் கருப்பு (தனுஷ்). சேவல் சண்டையில் பேட்டைகாரரின் பரம எதிரி தான் S.I. ரத்தினசாமி. இவர்களுக்குள் நடக்கும் சேவல் பந்தயத்தில் போலீஸ் ரெய்டு வர எல்லாரும் திக்காளுக்கு ஒருத்தரை சிதறி ஓடுகின்றனர். அதில் நம் ஹீரோ கருப்பும் ஒருவர். அவரின் சேவலை ரத்தினசாமி ஆட்கள் களவாடி சென்று ஐரீன் (தபஸ்ரீ) வீட்டில் அவர் கோழியுடன் சேர்த்து ஒளித்து வைத்து விடுகின்றனர். சேவலை மீது கோழியை அறுத்து போடும் போது ஐரீனை பார்க்கிறார் கருப்பு. பின்னர் என்ன? காதல் தான்...
ஐரீனின் பின்னால் சுற்றி சுற்றி வருகிறார் கருப்பு. அவரும் பொய்யாய் காதலிப்பதாய் சொல்லி வைக்கிறார். இதற்கிடையில் சண்டைக்காக சேவலை தயார் செய்வதில் கோட்டை விடுகிறார் கருப்பு. பேட்டைக்காரர் அறுத்தெறிய சொன்ன பின்பும் சேவலை சண்டைக்காய் பாசமாய் வளர்க்கிறார். சில பில திருப்பங்களுக்கு பின் சேவல் சண்டையில் பேட்டைகாரர் சார்பில் ரத்தினசாம்யின் சேவலுக்கு எதிராக தன் சேவலை பறக்க விடுகிறார். அது நிச்சயம் தோற்று தனக்கு அவமானத்தை தேடித் தரும் என் நினைத்து தனக்கும் அந்த பந்தயதிர்க்கும் சம்பந்தம் இல்லை, தன் பெயரைச் சொல்லி பந்தயத்தில் இருப்பவர் எவருடனும் தனுக்கு சம்பந்தம் இல்லை என்று மைக்கில் அறிவித்து விடுகிறார். இதையும் மீறி கருப்பு தொடர்ந்து நான்கு பந்தயத்தில் தன் சேவலை பறக்க விட்டு பெரிய வெற்றி பெறுகிறார்.
தன் வார்த்தையை மீறி சேவலை வளர்த்த கோவத்திற்கு மேலும் மேலும் பல சம்பவங்கள் எண்ணையை ஊற்றி பெருந்தீயாய் வளர்க்க பேட்டைகாரரும் கருப்பும் பிரிகிறார்கள். துரை மட்டும் சமாதான பாலமாய் இருக்க அவருடனும் மனஸ்தாபம் வளர்ந்து பகையாய் முடிகிறது. முந்தைய பந்தயத்தில் சம்பாதித்த மூன்று லட்சம் கருப்பின் பணம் என்ன ஆனது? வாழ்க்கையில் settle ஆனாரா? அவருடைய காதல் கை கூடியதா? பேட்டைகாரர் மற்றும் துரையுடன் பகை என்ன ஆயிற்று? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தான் இரண்டாம் பாதி படம். இனி படத்தை பற்றி மொத்தமாய் பார்ப்போம்...
G.V.பிரகாஷின் இசை அருமை. யாத்தே யாத்தே மற்றும் அய்யய்யோ பாடல்கள் தான் அருமை என்று நினைத்திருந்தேன். அந்த rap பாடல் கூட படத்தில் வரும் போது அருமையாகவே இருக்கிறது. படத்தில் நிதானமான திரைக்கதைக்கு உறுதுணையாய் ஒரு நெஞ்சை பிசையும் இசை வருகிறது. Godfather BGM மாதிரி. அருமை. தனுஷின் நடிப்பிற்கு ஒரு பெரிய தீனி போட்டிருக்கிறார் வெற்றிமாறன். வெளுத்து வாங்கி இருக்கிறார். "நாம ரெண்டு பெரும் ஒரு கிச் அடிச்சிக்கலாமா?" என ஆர்வமாய் அவர் கேட்கும் அந்த ஒரு dialogue'கிற்காகவே படம் பார்க்க சென்றவன் நான். "ஒத்த சொல்லால" பாடலுக்கு திரையரங்கத்தில் ஆடாமல் இருக்க என்னை நானே கட்டுப்படுத்த அவ்வளவு சிரமமாய் போய்விட்டது. படத்தின் முதல் பாதியில் இவரின் யதார்த்தமான நடிப்பில் கொடுத்து காசிற்கு வசூலென முடிவிற்கு வந்துவிட்டேன். சேவல் சண்டையை படமாக்கியிருக்கும் விதமும் அந்த க்ராபிக்ஸும் ஏதோ இரண்டு போர் வீரர்கள் சண்டை போடுவதை போல் உணர முடிகிறது. ஒளிப்பதிவாளுருக்கும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் டீமுக்கும் பாராட்டுக்கள். கிளைமாக்ஸில் துரையும் கருப்பும் சண்டையிடுவதை சில நொடிகள் சேவல் சண்டையை போல் சித்தரித்திருப்பது அருமை. வெற்றிமாறனுக்கு சபாஷ். ஆனால் படத்தின் முடிவு கொஞ்சம் பாரமாய் இருக்கிறது. சந்தோஷமாய் படம் பார்த்தே வந்த நமக்கு இப்படி ஒரு கனமான முடிவு ஏற்றுக் கொள்ள கடினம் தான்.
தபஸ்ரீக்கு ஆண்ட்ரியா ஜெரமையாவின் குரல் மிகவும் பொருந்தி இருக்கிறது. பேட்டைக்காரருக்கு ராதா ரவியின் குரல் OK தான் என்றாலும் அவர் முகமே வந்து போகிறது. கிஷோருக்கு சமுத்திரக்கனியின் குரல் கணீரென இருந்தாலும் அவருடைய சொந்த குரலே நல்லா தானே இருக்கும் எனத் தோன்றாமல் இல்லை. வசனங்கள் சில இடங்களில் புரியவில்லை. பின்னணி இசை ஒரு காரணமென்றால் மதுரையின் ஆழமான வார்த்தைகளும் ஒரு காரணம். கதை களம் மிகவும் புதிது. கதாநாயகன் என்றில்லாமல் கதையின் நாயகர்களாய் இருக்கின்றனர் அனைவரும். இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளரும் இதில் அடக்கம். நகைச்சுவை, காதல், பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, சந்தேகம், பகை என பல பரிணாமங்களில் படம் பிரயாணம் செய்கிறது.
மொத்தத்தில் பொங்கலுக்கு குடும்பத்துடன் போய் மக்கள் நிம்மதியாய் பார்க்க வேண்டிய திரைச்சித்திரம் இது. கொடுத்த காசிற்கு தேவையான entertaainment இந்த படத்தில் நிச்சயம் உண்டு. தனுஷின் வெற்றி பாதையில் இன்னொரு மைல் கல் இந்த ஆடுகளம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment