Saturday 5 September 2009

அந்த இரவு நேரங்கள்


வெள்ளிக்கிழமை வேலைமுடிந்து
அலுவலக நண்பர்கள் அனைவரும்
தத்தம் வீடுகளுக்கு சென்றுவிட,
இரண்டு மணிநேரம்
தனிமையில் அதிகவேலை பார்த்துவிட்டு
மொழி புரியாத ஓட்டுனருடன்
உரையாடல் தவிர்த்து
அலுவலக ஊர்தியில்
வீடு திரும்பும்
அந்த இரவு நேரங்களில்,
இதயத்திற்கும் மூளைக்கும்
போராட்டம் நடந்து
கண்களில் நீர்கோர்க்கும்
அதே இரவு நேரங்களில்
உணர முடிகிறது,
சில ஆயிரம் மைல்கள்
பிரிந்து வந்துவிட்ட
நண்பர்களின் நட்பையும்
பெற்றோர்களின் பாசத்தையும்...

No comments:

Post a Comment